கடன் கொடா வங்கி

கடன் கொடா வங்கி

கடன் கொடா வங்கி பின்னர் எதற்க்காக கடன் தருகிறேன் என்று விளம்பரம் செய்து அதன்பின் மாதகணக்காக தராமல் அழைக்கழிப்பது என்னவொரு நியாயம்.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.01.2024

பட்டியல் 📋

2008 ஆண்டில் ஏற்பட்ட வாராக்கடன் பிரச்சனை காரணமாக வங்கி மேலாளர்களின் அதிகாரம் சர்வாதிகாரமாக மாறிவிட்டது.

“நான் கொடுப்பது தான் கடன்” 👿

வங்கியின் பெயர்: இந்தியன் வங்கி

கடன் திட்டத்தின் பெயர்: PMEGP

திட்டத்த்தின் தகவல்கள்: 📖

  • மண்பொருள் முதல் மென்பொருள் வரை
  • 18 வயதான அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • 15%, 25%, 35% வரை மானியம் வழங்கப்படும்.
  • உற்பத்தி தொழில்களுக்கு 50 லட்சமும் சேவை சார்ந்த தொழில்களுக்கு 20 லட்சம் வரையிலும் திட்ட மதிப்பீட்டில் விண்ணபிக்கலாம்.

விளம்பரம்: 📰

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பியுங்கள்.

  • PMEGP பயனாளிகள் தொழிலை விரிவுபடுத்த இரண்டாவது முறையாக வங்கி கடனுடன் 15% மானியம் இத்திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

நிலைமை: 😤

தொழில் துவங்க மூன்று லட்சம் கேட்டால். நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் பட்டியலிட்டு Quotation வாங்கி வாருங்கள்.

  • QuOtion வாங்கி கொண்டு சென்றால் கடன் ஏஜென்ட் உடல்நிலை சரியில்லாத காரணமாக விடுப்பில் உள்ளார் 10 நாள் கழித்து வரவும்.

தொழிலை எங்கிருந்து செய்யபோகிறீர்கள் வீட்டிலிருந்தா அல்லது வெளியில் கடை திறக்க போகிறீர்களா?

  • வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் என்றால் குடும்ப உறுப்பினர்கள் சேர்த்த புகைப்பட வேண்டும். கடை வைப்பது நல்லது.
  • வாடகை கடை திறப்பது தொடர்பான முன்பணம் மற்றும் வேலையாட்களுக்காக தொகையை கடனில் சேர்க்க இயலாது. சொந்த செலவில் செய்திட வேண்டும்.

நிறுவனத்திற்கு கணினி மற்றும் மொபைல் போன் வாங்க வேண்டும்.

  • மொபைலை பட்டியலில் சேர்க்க இயலாது. கணினி வாங்குவதற்கு பதில் நீங்கள் லேப்டாப் வாங்கலாமே. அதனை வெளியில் கொண்டு செல்ல முடியும்.
    • கணினியை அழித்துவிட்டு லேப்டாப் என எழுதவும். கடனை நான் கட்ட போகிறேனா அல்லது வங்கி அதிகாரிகள் கட்ட போகின்றனரா.

இரண்டு மாதங்கள் பின்பு, வங்கியின் மேலாளர் மாறவிருக்கிறார் சென்று 10 நாட்கள் கழித்து வரவும். மறுபடியுமா

  • புதிய மேலாளர், 10 நாட்களுக்கு பின் சுமார் 50 கேள்விகள் கொடுத்து பின்னர் இதற்கெல்லாம் பதில் எழுதி கொண்டு வரவும்.
  • கடையை உங்கள் கிராமத்தில் இல்லாமல் நகரத்தில் வைத்தால் தான் கடன் அளிப்போம்.

சரி சார், பின் நான் கேட்டிருந்த 3 இலட்சம் ரூபாயை அளிக்கவும்.

  • அதற்கு மேலாளர், அதை எப்படி நீ கேட்க போயிற்ரு நான் எவ்வளவு சொல்கிறேனோ அவ்வளவுதான் பணம் அளிக்கப்படும்.
  • என்னவோ நான் உங்க அப்பன் வீட்டு சொத்த கேக்குற மாதிரில அதிகாரம் செய்கிறாய்.
  • லஞ்சம் எனப்படும் பங்கு வேண்டும் என்றால் அதை நேரடியாக கேட்க வேண்டியது தானே.

லஞ்ச பணத்திற்காக எதற்க்காக சுமார் 4 மாதங்களாக அழைக்கழிக்கின்றீர்.

தீர்வு: 💯

  • இந்தியன் வங்கியின் அதிகாரபூர்வ வாடிக்கையாளர் தகவல் மையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது மேலாளர் இது போன்ற நிபந்தனைகளை விதிக்க கூடாது தவறு என்று கூறிவிட்டனர்.
    • நீங்கள் வேண்டுமானால் மாவட்ட மண்டல அலுவலரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறிவிட்டனர்.
  • வங்கி மேலாளர் தங்களை கடவுள் என்றே நினைத்து விட்டார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மறந்துவிட்டார் பாவம்.
    • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள்.
      • வங்கி கிளை இத்திட்டத்தில் எத்தனை நபர்களுக்கு கடன் அளித்துள்ளது.
      • புதிய வங்கி மேலாளர் இதுவரை எவ்வளவு கடன் அளித்துள்ளார்.
      • அவர் கடன் அளித்துள்ள இனம் மற்றும் ஜாதி ஆகியோரின் பட்டியல்கள் தேவை.
    • இக்கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிப்பது வங்கி மேலாளர்களுக்கு அவசியம்.
  • தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைக்கும் தகவல் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியில் நேரடியாக புகார் அளிக்கலாம்.

அறிவுரைகள்: 👩‍🏫

  • வங்கி அதிகாரிகள் தங்கள் சம்பளத்தை மக்களின் வரிபணத்தில் இருந்து வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
    • ஆதலால் வாடிக்கையாளர்களை அடிமைகளாக என்ன கூடாது.
  • கடன் கொடா வங்கி மேலாளர் படித்தவர் போல நடந்து கொள்ள வேண்டும். தன்னை உயர்ந்தவன் என நினைத்துக்கொண்டு.
    • ஊழியர்களை வாடா போடா என்று அழைப்பது. இனவெறி கொண்டு அழைவது தவறு.
  • எப்படி பெரு நிறுவனங்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் கடன் கொடுக்கின்றீர்கள். பங்கு வந்துவிட்டதோ.
    • அவர்கள் வெளிநாட்டிற்கு ஓடிசென்றால் ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டாமல் தள்ளிபோடுகின்றீர்.
    • நீங்கள் வாங்கிய லஞ்சத்தை மக்கள் முன் சொல்லி விடுவார்கள் என்கிற பயமா?

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading