இந்திய இராணுவ தொழிற்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
- பயிற்சியின் பெயர்: 10+2 Technical Entry Scheme (COURSE-48)
காலியிடங்கள்: 90
வயது வரம்பு: 16 1/2 முதல் 19 1/2 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02..7.2003 க்கும் 01.07.2006 க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: pHYSICS, cHEMISTRY & mATHEMATICS ஐ ஒரு பாடமாக கொண்டு 60% மதிப்பெண்களுடன் ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூ. 56,100/- 1,77,500/-
உடற்திறன் தகுதி: 15 நிமிடத்திற்குள் 2.4 km ஓடி கடக்க வேண்டும். Skipping ஆட தெரிந்திருக்க வேண்டும். Pushups- 20, Situps-20, Chinups-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏறி கடக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் +2 மற்றும் JEE Main Exam இல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
SSB நேர்முகதேர்வானது Stage-1 & Stage 2 என இரு கட்டங்களாக நடைபெறும்.
Stage-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு Stage-2 உடர்த்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு நடைபெறும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: Allahabad, Bhopal, Bengaluru, kapurthala.
SSB நேர்முக தேர்வுக்கான Call Letter ஐ டவுன்லோடு செய்து பெற்று கொள்ளவும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை இராணுவ பயிற்சி ஒரு வருடமும். இராணுவ தொழிற்நுட்ப பயிற்சி நான்கு வருடமும் வழங்கப்படும். பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜனவரி 2023. ஐந்து வருட பயிற்சி முடித்தப்பின் இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் http://www.joinindianarmy.nic.in என்ற இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
SSB நேர்முகத்தேர்வின் போது கல்வித்தகுதி சான்றிதழ், வயது சான்று, JEE Main தேர்வு மதிப்பெண் சான்று ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 21.09.2022





